பொதுஜன பெரமுன மகளிர் பிரிவு அலுவலகம் பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆதரவாளர்களின் ஊர்வலத்திற்கு மத்தியில் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை நாமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில்பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.