பிரதான செய்திகள்

பேஸ்புக் பதிவு மூலம் நாட்டு மக்களுக்கு சஜித் அறிவித்தல்

நாட்டில் காணப்படும் ஆபத்தான நிலைமை காரணமாக மீண்டும் அறிவிக்கப்படும் வரை அனைத்து பொதுக் கூட்டங்களையும் இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.


ஐந்து வாரங்களுக்கு முன்னர் சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய சந்தர்ப்பத்தில், அதன் ஆபத்து தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சுட்டிக்காட்டி வந்தார். எவ்வாறாயினும் இலங்கையிலும் அந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.


அந்த சந்தர்ப்பத்தில் அனைத்தையும் விட மக்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஆரோக்கியமான இலங்கைக்காக அனைவரும் கட்சி பேதமின்றி இணைய வேண்டியது அத்தியவசியம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்சி காரியாலயத்தை வவுனியாவில் திறந்து வைத்த விக்னேஸ்வரன்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் கொண்டுவந்த தையல் இயந்திரங்களை மஸ்தான் வழங்கினார்.

wpengine

கல்முனை நகர மண்டபத்தை மீள ஒப்படைக்க மாத இறுதி வரை மட்டும் அவகாசம்; ஆணையாளர் அறிக்கை

wpengine