தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துகொடுத்த முன்னால் அமைச்சர்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பேஸ்புக் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு இராபோசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.
கொரகான பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்க வேண்டும் எனவும் அவருக்கு 10 வீதமான வாக்கு வங்கி இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வீத வாக்கும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் பதிவுகளை பதிவேற்றுமாறு வீரவங்ச, பேஸ்புக் செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ரணிலின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கினார் ஸ்ரீ ரங்கா!

Editor

ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் அமைச்சர் ஹக்கீம் உருவாக்கவில்லை! ஹசன் அலி

wpengine

தங்கத்தின் விலையில்  மீண்டும் கடும் அதிகரிப்பு

wpengine