Breaking
Fri. Apr 19th, 2024

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை ஒட்டிய சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடம் சென் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 430,000 சதுரடியில் அமைந்துள்ளது.

மிகவும் தாழ்வான பகுதியை தலைமையிடம் அமைக்க பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

இதே போன்று கூகுள் நிறுவனத்தின் தலைமையிடம் மலைஅடிவாரத்திலும், சிஸ்கோ தலைமையகம் சான் ஜோஸ் பகுதியை ஒட்டிய கடல் பகுதியிலும் அமைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் கடல்மட்டமும் உயர துவங்கி உள்ளது. இது 6 அடி வரை உயரும் போது இந்நிறுவனங்களின் தலைமையகங்கள் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே நல்லது. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இடத்தை மாற்றுவது அவர்களின் ராடார்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *