பிரதான செய்திகள்

பேஸ்புக் குற்றம் கைது செய்யும் பொலிஸ்

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் அல்லது வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா கருத்து வெளியிட்டார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் தனியாக ஒரு பிரிவை அமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வெலிகம பிரகடனம் ஒரு மீள்பார்வை

wpengine

யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

Editor

வவுனியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Editor