பிரதான செய்திகள்

பேஸ்புக்,வட்அப் ஏன் முடக்கம்

இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் திடீரென முடக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும் இணைய சேவை அல்லது தொலைபேசி இணைப்புகள் முழுமையாக தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகள் நேற்றைய தினம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது நுழைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வன்முறை செயற்பாடு தொடர்பில் தகவல் பெற்றுக்கொள்வதற்காகவும், அவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவும், உதவி சேவை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இனவாதம் மற்றும் மதவாதமான முறையில் செயற்படுபவர்கள் தொடர்பில் தகவல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக பாதுகாப்பு சபை பிரதானிகள் அலுவலகம் 24 மணித்தியாலங்களும் செயற்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி ஆதரவு சேவை வழங்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்காக வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இல்லக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தகவல் வழங்குமாறும், அவசியமான உடனடி உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0711261261

மின்னஞ்சல் முகவரி – helpdesk@dig.gov.lk

Related posts

இத்தாலியில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

wpengine

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிப்பு

wpengine

இரத்தினபுரி மக்களுக்கு 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட்

wpengine