செய்திகள்பிரதான செய்திகள்

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் இராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ லொரி மீது மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்பர்புர பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதேச சபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபா,உறுப்பினருக்கு 15ஆயிரம்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் பொதுபல சேனா

wpengine

தேசிய ஷூரா சபை அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

wpengine