Breaking
Fri. Apr 19th, 2024

பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கடந்த 21ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு நேற்றுமுன்தினம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த விடயத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பீ.சி.ஆர். பரிசோதனையின் மாதிரிகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *