பிரதான செய்திகள்

புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி ஏற்படுத்தி வருகின்றது- ஞானசார தேரர்

ஜே.வி.பி. கட்சி பௌத்த மதத்திற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பௌத்த மதத்திற்கு ஜே.வி.பி கட்சியும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் செய்து வரும் அழிவுகள் பற்றி விரைவில் மாநாயக்கர்களிடம் முறைப்பாடு செய்யப்படும்.

பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி மேற்கொண்டு வருகின்றது.

சர்வமத அமைப்பு என்ற பெயரில் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கின்றனர்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளும் பௌத்த பிக்குகளை ஜே.வி.பி தனது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது.

இந்த நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி பிரதேச சபை அசமந்தம்

wpengine

காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் நாமல்

wpengine

எவ்வேளையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் கவிஞர் ஏ.இக்பால் ஏ.எச்.எம். அஸ்வர்!

wpengine