பிரதான செய்திகள்

புத்தளம்,கொய்யாவாடி பள்ளிவாசலில் தொடர் குழப்ப நிலை! செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்

புத்தளம்,கொய்யாவாடி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட அசம்பாவிதத்தை தொடர்ந்து அதன் தொடராக நேற்று இரவு மஃரிப் தொழுகையின் பின்பு பாதிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினரின் உறவினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தீர்வினை வேண்டி நின்றதாக அறியமுடிகின்றது.

இதன் போது நிர்வாக உறுப்பினரை தாக்கிய பள்ளிவாசல் செயலாளரும்,ஆசிரியருமான இவர் ஒரு அரசியல் கட்சியினை சார்ந்தவராகவும்,அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொள்ள பொய்யான காரணங்களை சொல்லி புத்தளம் வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார், என்றும் அது போது அவர் நிர்வாகம் செய்யும் நுறைச்சோலை  பொலிஸ் நிலைய பிரிவில் எந்த வித முறைப்பாடுகளையும் செய்யாமல் சூழ்ச்சிதனமாக வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான உயர் பதவியில் உள்ள செயலாளர் மிகவும் கீழ்தரமாக நடந்து கொண்ட விடயத்தை ஊர் மக்கள்,அந்த கிராமத்தில் உள்ள கல்வியலாளர் மிகவும் கேவலமாகவும், இவர் செயலாளர் பதவிக்கு தகுதியில்லை என்ற கோரிக்கையினை பல இளைளுர்கள்,சமுக ஆர்வளர்கள் முன் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

பாதிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினருக்கும்,செயலாளரின் அனாகரிகமான செயலை கண்டித்தும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை பள்ளிநிர்வாகம் எடுக்க வேண்டும் இல்லை என்றால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். என பலர் தெரிவித்தனர்.

Related posts

மித்தெனிய மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது.!

Maash

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு வழங்க யார் காரணம்

wpengine

மன்னாரில் வெள்ளைப்பிரம்பு தினம்

wpengine