பிரதான செய்திகள்

புத்தளத்தின் பல பகுதிகளிலும் வௌ்ளம்: மன்னார் வரையான பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் இதுவரையும் வடிந்தோடாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளனது.

எழுவான்குளம் பகுதியே வௌ்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அந்தப் பகுதி மக்கள் எழுவான்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள விகாரையில் தங்கியுள்ளனர்.

புத்தளம் – மன்னார் செல்லும் ஓயா மடுவ வீதி மற்றும் மரிச்சிகட்டி  வீதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன் சில கிராமப்புற வீதிகளிலும் வெள்ள நீர் பாய்ந்து செல்வதினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Related posts

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

wpengine

யாழ் உதைப் பந்தாட்ட விளையாட்டு போட்டி பிரதி அமைச்சர் பங்கேற்பு

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine