பிரதான செய்திகள்

புதுவெளிச் சந்தியில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும்! வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுவெளிக்கிராமத்தில் இருந்து வரும் எம்.சி.எ.கபூர் வீதி சிலாவத்துறை முருங்கன் பிரதான வீதியுடன் இணைகிறது.

இலந்தைக்குளம், மணக்குளம்,பண்டாரவெளி,மேத்தன்வெளி,அளவக்கைச் சிறுக்குளம் போன்ற கிராமங்களை இணைக்கும் வீதியும் கபூர் வீதியுடன் இணைகிறது.

மேற்சொல்லப்பட்ட கிராம மக்கள் அனைவரும் பயணத்திற்காக இச்சந்தியையே பயன்படுத்துகின்றனர்.

இங்கு வரும் பயணிகள் வெயில்,மழை போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, இம்மக்களின் நன்மை கருதி ஒரு நிழற்குடையை அமைக்க வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச மக்களின் ஆதரவை பெற்ற வடமாகாண சபை உறுப்பினர்  றிப்கான் பதியுதீன் ,முசலிப் பிரதேச சபை செயலாளர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர்கள்

wpengine

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

wpengine

எமது நல்ல பண்பாடுகளின் மூலமாவே எமக்கெதிரான எதிர்புக்களை வென்றெடுக்க முடியும்-ஷிப்லி பாறுக்

wpengine