பிரதான செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

 
இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார்.

 
பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.

 
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Related posts

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஷ்டி வழங்க முடியாது

wpengine

புதிய அரசியலமைப்புச் சட்டம்! தென் பகுதியில் அச்சம் -தம்பர அமில தேர்ர்

wpengine

போலி 5000 ரூபாய் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற பெண் கைது..!

Maash