பிரதான செய்திகள்

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்திற்கு உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Related posts

வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் அறிவித்தலின்றி திறக்கப்பட்டமையால் ஒருவர் மரணம் .

Maash

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை – சந்திரிக்கா

wpengine

14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine