பிரதான செய்திகள்

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” நடத்தும், “கௌரவிப்பு விழா”

புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை, மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்துவதுடன், மாற்றுத் திறனாளிகள் சிலரும் “தாயகம் சமூக சேவை அகத்தினால்” கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

மேற்படி விழாவில் புங்குடுதீவு முன்பள்ளி மாணவ, மாணவிகள், & ஆசிரியர்களும், “அமரர் கந்தையா தனபாலன்” ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரால் கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

இதேபோல் புலமைப் பரிசில் பரீடசையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவி செல்வி. விஜயகுமாரசர்மா ஐஸ்வர்யா அவர்களுக்கு, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவப்படுத்தல்..
அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

இடம்..: அம்பலவாணர் கலையரங்கம், புங்குடுதீவு.
காலம்..: 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணிக்கு…
“அனைவரும் வருக.. ஆதரவு தருக”..
இவ்வண்ணம்.
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்” புங்குடுதீவு.

Related posts

அதிர்வு நிகழ்ச்சியில் வில்பத்து விவகாரம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள்

wpengine

முன்னால் உறுப்பினர்களுக்கு வெளிவந்த ஆப்பு

wpengine

திரவியம் தேடும் திராவிடர்களின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள்..!

wpengine