செய்திகள்பிரதான செய்திகள்

புகையிரத கடவையில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞர் புகையிரதத்தில் மோதி பலி..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணியில் இன்று அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கருவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ்.நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.


புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலத்தினை மோதிய புகையிரதத்தில் எடுத்துச் சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

காத்தான்குடி நகர முதல்வரின் அதிரடி நடவடிக்கை! தினக்குரல் பத்திரிகைக்கு தடை

wpengine

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை : அரசாங்கம்.

Maash

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த உ/த பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பாடக்குறிப்புகள்

wpengine