பிரதான செய்திகள்

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது பூதவுடல் இன்று (07) அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார கடந்த வாரம், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிழையான பாதையில் சென்ற நாட்டினை சரியான பாதையில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ளது.

Maash

றிஷாட் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற அலி

wpengine

‘தேவையான நெல் கையிருப்பில் இருப்பதாக அரசு தெரிவிப்பது பொய்’

Editor