செய்திகள்பிரதான செய்திகள்

பிரதான பிக்குவினால் ஸ்மார்ட்ஃபோன் பறிமுதல், உயிரை விட்ட இளம் பிக்கு.!

தங்காலை வனவாசி சிறிய விகாரையில் பிரிவெனாவில் கல்வி கற்கும் 20 வயதுடைய பிக்கு மாணவனின் ஸ்மார்ட்ஃபோன் நிர்வாகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பிக்கு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட தேரரிடம் இருந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை நேற்று முன்தினம் பிரதான பிக்கு பறிமுதல் செய்துள்ளார். இதனால் பிக்கு தேரர் மனம் உடைந்துள்ளார்.

இது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த பொரிவெனா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கைத்தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட பிக்குவிம் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தங்காலை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனாபதி டி சில்வா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

Related posts

மன்னாரில் கிராம சக்தி வேலைத்திட்டம்! பிரதேச செயலாளர்கள் பங்கேற்பு

wpengine

2023 பாடசாலைகளில் 1ம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Editor

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

wpengine