பிரதான செய்திகள்

பிரதமர் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்கள் ஆர்பாட்டம்

சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மக்கள், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியை மறித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர், கொஸ்வத்தை வைத்தியசாலை சலாவ இராணுவ முகாம், அதற்கு அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தமது கட்டங்களை பார்வையிட பிரதமர் வராமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிலர் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல மணித்தியாலங்களுக்கு இறுக்கமான வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.ra.jpg2_

Related posts

முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

Maash

ஐக்கிய தேசிய கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் இல்லை

wpengine

அரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்

wpengine