பிரதான செய்திகள்

பிரதமர் போட்டி! சஜித்துக்கு பதிலடி கொடுத்த ரணில்

புதிய பிரதமர் நியமன முறை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறிய கருத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பதில் அளித்துள்ளார்.

புதிய பிரதமர் விடயத்தில் அரசியலமைப்பு படியே நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் புதிய ஜனாதிபதி, பிரதமரின் அனுமதியுடனேயே அனைத்தும் செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய சஜித் பிரேமதாச, “தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடிந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார்” என கூறினார்.

இந்நிலையில், சஜித் பிரேமதாசவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கமாட்டோம் ; ஜெகதீஸ்வரன் எம்.பி உறுதி..!

Maash

ஞானசார தேரரை மறைத்து அரசாங்கம் மஹிந்த

wpengine

கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள்

wpengine