பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

Related posts

ரணில்,மைத்திரி ஆட்சியில் முஸ்லிம்களின் காணியில் அத்துமீறும் பௌத்த மதகுருக்கள்

wpengine

யாழ் மக்களின் பிரச்சினை! சகோதர இனம் என்ற எண்ணத்தில் இவர்களை பாருங்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Maash