தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பேஸ்புக்கில் தரவேற்றம்!

சேருநுவர பிரதேசத்தில் நீண்டகாலமாக பெண்ணொருவரை காதலித்து பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதன் ஒளி நாடாவை பேஸ்புக்கில் (சமூக வலைத்தளத்தில்) தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை இளைஞர் பாடசாலைக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். குறித்த பெண்ணை பல தடவைகள் பல இடங்களுக்கும் சென்று பாலியல் உறவு கொண்டுள்ளதுடன் அதை இரகசியமாக கைத்தொலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு வீட்டாருக்கும் பிணக்குகள் ஏற்பட்டவுடன் குறித்த இளைஞன் பாலியல் நாடாவை முகநூலில் தரவேற்றம் செய்துள்ளார். இதனை அறிந்த பெண் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

wpengine

மன்னாரில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

wpengine

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

wpengine