பிரதான செய்திகள்

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்தஅறிக்கைகள் தொடர்பில் விவாதிக்க பெப்ரவரி மாதம் 8ம் திகதி நாடாளுமன்றத்தைகூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

தெனியாயவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சபாநாயகரை சந்தித்த போது இது குறித்து அவரிடம் கூறியதாக பிரதமர்தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பெப்ரவரி 8ம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாகவும், அது தொடர்பானகடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் சபாநாயகரிடம் தாம்கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால், எதிர்வரும் 10 ஆம் திகதிதேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் சவால்விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிரதமர் ரணில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine

விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் ஒருவர் மரணம் .

Maash