பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அண்மைக் காலங்களில் அவர் வெளியிட்டு வந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இது தவிர ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் சம்பந்தமாகன தகவல்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

அமைச்சர் றிஷாட் தபால் அமைச்சரனால் என்ன நடக்கும்! பெருநாள் தினத்தில் நீர் வெட்டு ஏற்படுமா?

wpengine

பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை

wpengine

சமூகவலைத்தளத்தில் அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்க தடை

wpengine