பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அண்மைக் காலங்களில் அவர் வெளியிட்டு வந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இது தவிர ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் சம்பந்தமாகன தகவல்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

6 வாரங்களில் 120 பில்லியன் அரசாங்கத்திற்கு நஷ்டம்

wpengine

ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்?

wpengine

விரக்தியிலும், மனக்கவலையிலும் இருக்கும் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் கைகொடுக்கின்றன.

wpengine