பிரதான செய்திகள்

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வானது இன்று (12) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் ஊடாக பல வகையான உணவு வகைகளை பெற்றுக் கொள்ள முடியும் இடியப்பம்,ரொட்டி ,இட்லி உள்ளிட்ட உணவு வகைகளை பெற்றுக் கொள்ளலாம். 


குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பதவி நிலை உத்திதோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related posts

13 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!

wpengine

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”

wpengine

பனை உற்பத்தி பொருட்களை அதிகரிக்கும் நானாட்டன் சுபாஜினி

wpengine