பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய பகுதிக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று பிற்பகல் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, பிரதி அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மக்களின் அவசர தேவைகள் தொடர்பாக, கொடப்பிட்டிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களிடம் கலந்தாலோசித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் றிஸாட் பதியுதீன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கொடப்பிட்டிய பள்ளிவாசலிலே அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து-ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி.!

Maash

மன்னார்,நானாட்டான் பகுதியில் விபத்து! பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

wpengine