பிரதான செய்திகள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்

2017ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

14 குழுக்களாக இந்த நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இம்முறை 500 தொடக்கம் 1700 ரூபா வரை பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதனைப் பயன்படுத்தி விரும்பிய ஏதேனும் ஒரு வர்த்தக நிலையத்தில் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் பள்ளிமுனை ஓடை ஆளப்படுத்தும் செயற்திட்டம் வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டது.

Maash

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

wpengine

முல்லைத்தீவு, பழையமுறிகண்டி வீதி துப்புரவு!

Editor