பிரதான செய்திகள்

பஷீர் சேகு­தாவூத் இடை­நி­றுத்­தம்! புதிய தவி­சா­ள­ராக மன்சூர் ஏ. காதர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 27 பேராளர் மாநாட்டில் கட்­சியின் புதிய தவி­சா­ள­ராக மன்சூர் ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்­சியில் தவி­சா­ள­ராக நீண்­ட­காலம் பத­வி­வ­கித்த முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் குறித்த பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்பெறும் இந்த மாநாட்டில், கட்சியின் புதிய உறுப்பினர் சபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும், பேராளர் மாநாட்டில் கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு ஆத­ர­வா­ளர்­களின் ஒப்­புதல் பெறப்­ப­ட­வுள்­ளது. கட்­சியின் யாப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரு­வ­தாயின் பேராளர் மாநாட்டின்போதே அதனை மேற்கொள்ள முடியும். ஆகவே, கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விடயத்தில் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சமுர்த்தி வழங்கிய விடயத்தில் அரசியல்வாதிகள் உரிமை கோரமுடியாது.

wpengine

முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம்

wpengine

பாலர் பாடசாலை ஆசிரியர்கள் கொடுப்பனவு! அரசு கவனம்

wpengine