பிரதான செய்திகள்

பஷீரின் எச்சரிக்கை ஹக்கீமுக்கு

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.அதற்காக இப்படியானவர் சமூகத்தை தலைமை தாங்குவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

 

அவர் தன்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருப்பின் அதனை ஒரு போதும் பொது மக்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.அதனை ஒரு பொருத்தமான இடத்தில் சமர்ப்பித்து தீர்வை பெற முயல வேண்டும்.இதில் சில பெண்களின் வாழ்வும் சீரழிந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தூண்டி விட்டு புதினம் பார்க்காது அனைவரும் சேர்ந்து ஒரு தகுந்த வழி முறையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

 

மு.காவின் தவிசாளர் பஷீரின் கேள்விகளுக்கு அவரின் பிழைகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது.அவரே தான் பிழைகள் செய்துள்ளேன் என்பதை ஏற்றுக்கொல்கின்றாரே!

Related posts

தவத்தை வைத்துக்கொண்டு மு.கா.கட்சி எப்படி செயற்பட்டது என்று அறியமுடியும்.

wpengine

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Maash

ஜனாதிபதியின் பிரகடனம் வாபஸ் பெறப்பட்டால் வனப்பகுதிகள் அழியும்! ஒரு போதும் இடமளியோம்- சாகர தேரர்

wpengine