பிரதான செய்திகள்

பண மோசடி தொடர்பில் முன்னாள் மாநகர சபை பெண் உறுப்பினர் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கிடைக்கப் பெற்ற 11 முறைப்பாடுகளையடுத்து  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி அவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

wpengine

அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

wpengine

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 23பேர் பலி

wpengine