பிரதான செய்திகள்

பண்டிகை காலம்! சதொச விற்பனை நிலையங்களில் விசேட விலைச் சலுகை

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

ஒரு கிலோ பருப்பு, 500 கிராம் உருளைக்கிழங்கு, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், 2 கிலோகிராம் அரிசி, 500 கிராம் கருவாடு, ஒரு கிலோகிராம் சீனி, 425 கிராம் பொதிசெய்யப்பட்ட மீன், 200 கிராம் துண்டு மிளகாய், 500 கிராம் பாசிப்பயறு மற்றும் 400 கிராம் பால்மா அடங்கிய பொதியே 975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Related posts

சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட்டின் உருவ பொம்மையை எரித்து கல்லடியில் ஆர்ப்பாட்டம்!

Editor

ஜனாதிபதி தேர்தலுக்காக 41 பேர் கட்டுப்பணம்! இறுதியாக ஹிஸ்புல்லாஹ்,சிவாஜிலிங்கம்

wpengine

சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

wpengine