பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு இதே! சந்தர்ப்பம் நிங்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

அரசாங்கம் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 8ஆம் திகதியென குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசதுறையில் அல்லது தனியார் துறையில் இதுவரை ஏதேனும் சேவையில் (தொழில்) இணைந்திராத பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 – 35 வரை வயதுள்ள ஆண், பெண் இருபாலாரும் தீவில் எந்தப் பகுதியிலும் பணியாற்றக் கூடியதாக உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவாகும் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சி நடைபெறும் கால கட்டங்களில் மாதமொன்றுக்கு 20,000 ரூபா மட்டும் கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளர்.

Related posts

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

wpengine

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்!

Editor

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine