பிரதான செய்திகள்

பசறையில் விபத்து! 13 பேர் மரணம் 30க்கு மேல் படுகாயம்

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, இன்று (20) காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பசறை, லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி, சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் சிலர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முதன் முறையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம்!

wpengine

மினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! ஹெல உறுமயவின் பிரதித்தலைவர் மதுமாதவ அரவிந்த பின்புலம்

wpengine

நான் தெரிவிக்கவில்லை! நான் எப்போதும் எனது மக்கள் சார்பாக இருப்பேன்-யோகேஸ்வரன்

wpengine