மேலும் 170 பேர் காயம், அதில் 70 பேர் ஆபத்தான நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஸ் விமானப்படையின் ஜெட் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டபோது தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் வீழ்ந்து வெடித்து தீப்பற்றி எரிந்ததில் சுமார் நான்கு வகுப்பறைகள் மாணவர்களுடன் அனர்த்தத்தில் சிக்கியது.

இதில் இரண்டு வகுப்பறைகள் முற்றாக தீயில் கருகி அழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

