பிரதான செய்திகள்

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் விரைவில்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

சிறுபோக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

Related posts

“இயற்கையை ஒன்றி வாழப் பழகுவோம்” முசலியில் ஆரம்பித்த அரசாங்க அதிபர்

wpengine

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போர் பிரகடனம்.

wpengine

குருகுலராஜா ஊழல் குற்றச்சாட்டு! பொருமை காக்கும் படி கூறிய மாவை

wpengine