அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நுவரெலியா பிரதேச சபை, ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுடன் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரான வேலு யோகராஜா மீண்டும் தவிசாளராக போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.என்.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இன்று புதன்கிழமை காலை 12 மணிக்கு நானுஓயாவில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் நடைபெற்ற முதலாவது கன்னி செயலமர்வில் இ தொ கா வேலு யோகராஜா தவிசாளராகவும் உப தவிசாளராக தேசிய மக்கள் முன்னணியின் ஹேவகே ஹாச தில்ருக்சி பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உப தவிசாளர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டனர். இப் பதவிக்கு போட்டியிட்ட. தேசிய மக்கள் சக்தியின் திருமதி ஹேவகே ஹாச தில்ருக்சி பொன்சேக்கா 13 வாக்குகளை பெற்று உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ஜெயகுமார் ஜெயசங்கர் 5 வாக்குகளும், அதே கட்சியை சேர்ந்த சராத்குமாரசிங்க பத்மஸ்ரீ 4 வாக்குகளை பெற்று இருவரும் தோழ்வியடைந்தனர்.

உப தவிசாளர் வாக்கெடுப்பின் போது ஜனநாய தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கனகசுந்தரம் லலித்குமார் மற்றும் மக்கள்போராட்ட முன்னணியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மஸ்ரீ ஆகிய இருவரும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

24 ஆசனங்களை கொண்ட நுவரெலியா பிரதேச சபையில் தேசிய மக்கள் சார்பில் 7 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 6 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 5 உறுப்பினர்களும்,, சுயேச்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 1 உறுப்பினரும், மக்கள் போராட்ட முன்னணி சார்பில்1 உறுப்பினரும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பில் 1 உறுப்பினரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 1 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

Related posts

அஜ்மான் நாட்டில் கண்டி இளைஞனுக்கு மரண தண்டனை..!

Maash

புலி குடும்பங்களுக்கு வடமாகண சபையின் பணம் – திவயின செய்தி

wpengine

படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகள்- சம்மந்தன்

wpengine