பிரதான செய்திகள்

நாளை புதிய அமைச்சரவை கூடட்டம்

புத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்றப் பின்னர், கடந்த 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதுடன் அது 20 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.
அந்த நேரத்தில் அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும் இடையில் துறைகள் சம்பந்தமான இழுபறி நிலை காணப்படும் சூழலில் நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்லாத்தை கேவலப்படுத்தினால் அது நல்ல செயல் என பிரதமர் நினைக்கிறாரா?

wpengine

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!-சுகாதார சேவைகள் பணிப்பாளர்-

Editor

International Mother Language Day 21 at Minister Mano Ganesh and Bangadesh Higher chief guest

wpengine