பிராந்திய செய்தி

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்

wpengine

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்றவர் கைது ..!

Maash

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

wpengine