பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரனை ஊடாக பாடம் எடுக்கும் மஹிந்த

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக நாட்டு மக்களை தௌிவுபடுத்தும் எதிர்பார்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரயைில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ராஜித சோனாரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றாரா இல்லைய என்பதல் முக்கியம், அவர் இலஞ்சம் பெற்றுக் கொண்டாரா என்பதே என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் வரும் காலத்தில் இது தொடர்பில் பார்க்கலாம் என்றும், அதன்போது மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது

wpengine

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

wpengine

வவுனியா தேவாலயமொன்றிலிருந்து முஸ்லிம் இளைஞர் கைது!

Editor