பிரதான செய்திகள்

நகராட்சி தேர்தலில் தாயீப் எர்டோகன் அமோக வெற்றி

துருக்கியில் இடம்பெற்ற நகராட்சி தேர்தலில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
துருக்கியில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தனது கட்சி 778 நகராட்சிகளில் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி எர்டோகன் அறிவித்தார்.

தனது கட்சியை, தொடர்ந்து 15வது முறையாக வெற்றி பெறச்செய்ததற்காக மக்களுக்கு அவர் தமது நன்றியை தெரிவித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவு படுத்தவில்லை சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

wpengine

வவுனியா,மன்னார் வீதியில் 201 கிலோ கஞ்சா

wpengine

மன்னார் மடு மாதா திருவிழா : இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

Maash