அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் பதிவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவாகியுள்ள குறித்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், நேற்று முன்தினம் மாலை 4.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், 

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 95 முறைப்பாடுகளும், வேறு வகையான சம்பவங்கள் தொடர்பில் 7 முறைப்பாடுகளுமாக 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இதுவரையில் கிடைக்கப்பெற்ற 1,490 முறைப்பாடுகளில் 1,319 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்களிப்பு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த அஞ்சல் வாக்களிப்புகள் இம்மாதம் 24ஆம், 25ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதேநேரம் வேட்பு மனு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியுள்ள 102 உள்ளூராட்சி மன்றங்களது வாக்குச் சீட்டுகள் மீண்டும் அச்சிடப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

டெஸ்ட் தொடரில் இருந்து விடைபெற்றார் மெத்யூஸ் :

Maash

சிலாவத்துறை வீட்டுத்திட்ட அழைப்பிதழ் வட மாகாண சபை உறுப்பினர்,முசலி பிரதேச உறுப்பினர்கள் பெயர் நீக்கம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine