அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தலுடன் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும், 204 சந்தேக நபர்களும் கைது!

(மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 05 ஆம் திகதி) வரை தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும் 204 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (நேற்று ஞாயிற்றுகிழமை (04) காலை 06.00 மணி முதல் இன்று திங்கட்கிழமை (05) காலை 06.00 மணி வரை) 5 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Related posts

விலையின்றிப் போன பேரம் பேசல் சந்தை; தமிழ், முஸ்லிம் முதலீடுகள் காப்பாற்றப்படுமா?

wpengine

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

Maash

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு பொருட்டல்ல…”

wpengine