பிரதான செய்திகள்

தேர்தலின் பின்பு கோத்தாவுடன் இணைவும் சஜித்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப்பெற்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.


சஜித் பிரேமதாசவினால் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை நடைமுறை அரசாங்கத்தின் சில பிரிவுகள் ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.


இதேவேளை ஜனாதிபதி தாம் சொல்வதை செயலால் காட்ட வேண்டும் என்றும் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார்.

Related posts

தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் திறமையானவர்கள், பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு இல்லை.

Maash

சில பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்து விசேட வர்த்தமானி வௌியீடு!

Editor

2.5% பஸ் கட்டணம் குறைப்பு எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைநிறுத்தம். :தேசிய போக்குவரத்து ஆணைக்குழு.

Maash