அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய ரீதியா ஒரு கொள்கை, பிரதேசத்தில் இன்னொரு கொள்கை NPP யை கிண்டல் செய்த மனோ கணேசன்.

ரிசாத் கட்சி, தொண்டமான் கட்சி, பிள்ளையான் கட்சி என்று வரிசையா இணைச்சு சபைகளை புடிச்ச சரித்திர பெருமை பெற்ற கட்சி NPP என்றும்,தேசிய ரீதியா ஒரு கொள்கை, பிரதேசத்தில் இன்னொரு கொள்கை என்று மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார்.

சந்திரபாபு திரைவான் பாட்டை கொஞ்சமா மாத்தி, “நானும் ஒன்னு, நீயும் ஒன்னு, நெனைச்சு பார்த்தா எல்லாம் ஒன்னு தோழா!” என்று முடிச்சு போட்டு, அரசியல் திரை வானில், இன்று JVPயை பார்த்து பாடலாம்.

“ரிசாத் கட்சி, தொண்டமான் கட்சி, பிள்ளையான் கட்சி” என்று வரிசையா?இணைச்சு சபைகளை புடிச்ச, புடிக்க ஆவன செய்த சரித்திர பெருமை பெற்ற கட்சி என இன்று முதல் JVP_NPP அழைக்கபடுகிறது.

இனி இங்கே வந்து “அது அப்படி, இது இப்படி,” என தவறுகளை நியாய படுத்த வேண்டாம் என, PVS என்ற “பொது-வெளி-சாமான்” களை எச்சரிக்க விரும்பறேன்.

தோ…பாருடா…ஆள வந்து, எட்டு மாசம் முடிய முன்னமே கோவணம் அவிந்து போச்சு!

இனி, “உள்ளே” தெரிவது என்ன? அதன் நிறம் என்ன? நீள-அகலம் என்ன? என விளக்கம் தந்து அசிங்க பட வேண்டாம் என “பொவெசா” என்ற PVS களுக்கு கூறுறேன்.

நிம்மதியா கல்லறைல தூங்கற, லெனினையும், மார்க்சையும் எழுப்பி வந்து எமக்கு விளக்கம் தர வேண்டாம் என “கொம்ரேட்” தோழர்களுக்கும் கூறுறேன்.

நான், நண்பர் ரிசாத், தொண்டா, பிள்ளையான் ஆகியோர குறை கூறல.

அவங்க, ஒன்னும் “அவங்களோட போக மாட்டே, இவங்களோட சேர மாட்டேன்னு”, வீர வசனம் பேசலயே! “தேவைன்னா யாரோடும் போகும்” வரலாறு அவங்களது!

1) தேசிய ரீதியா ஒரு கொள்கை, பிரதேசத்தில் இன்னொரு கொள்கை இல்லை,

2) கட்சி முடிவை மீறி யார் வாக்களித்தாலும் நடவடிக்கை என்ற கொள்கை வரலாறு கொண்ட கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) மட்டுமே.

ஆனால், அவங்கள சொல்லி குத்தமில்ல. JVP தான் வீர வசனம் பேசுச்சு.

ஒருவர, “ஷொப்பிங் பேக்”, என்றும், அடுத்தவர “அப்-கன்ட்ரி சாபம்” என்றும் “புகழ்ந்து தள்ளுச்சு”..!

ஊழல், காணி பிடிப்பு, அரசு சொத்து அபகரிப்பு, என எக்கச்சக்க Fileகள் எம் வசம் இருக்கு என வசனம் பேசுச்சு..!

இதுல, ஹைலைட் என்னென்னா, மட்டகளப்பு பிள்ளையான பிடிச்சு உள்ளயும் வைச்சு இருக்குதுனா பாருங்கோ!

கால கொடுமடா!

இனிமே நாமே, “புனிதர், அரிச்சந்திரர், கெளதமர், மனுநீதி கண்ட சோழர்” என்றெல்லாம், பொது வெளியில வந்து உங்களுக்கு நீங்களே, “சர்டிபிகேட்” கொடுக்காதீங்கோ!

“ஒப்பாரி-புகழ்” அம்பிகா முதல் ராதா, பத்மினி, சாவித்திரி, கிட்னா, பட்னா, கலைசெல்வி, மலைசெல்வி வரை, அல்லாருக்கும் மூனு மாசம் லீவு கொடுத்து, இஸ்ரேலுக்கு “ஹொலிடே” சவாரி அனுப்பி வைங்க!

அங்க போயி “தர்ம-யுத்தம்” செய்து அவங்கள சாகடிக்கலாம் அல்லாட்டிக்கு, “நானும் ஒன்னு, நீயும் ஒன்னு, நெனைச்சு பார்த்தா எல்லாம் ஒன்னு!” என்ற சந்திரபாபு பாட்ட பாடி பழகி வந்து இங்க நம்மள சாவடிக்கலாம்..!

Related posts

காலநிலை அனர்த்தப் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் மன்னாரில் .

Maash

கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு தொடர்பில் தகவல்..!

Maash

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

wpengine