செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்விளையாட்டு

தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி நேற்று (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது.

ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது. இந்நிலையில், வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சரியாக வழங்கப்படும்.

wpengine

ஆபாச படம் பார்த்த பசீலின் தொழில் சங்க தலைவர் பணி நீக்கம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

Maash