பிரதான செய்திகள்

தேசிய கண் வைத்தியசாலையின் அனைத்து அறுவை சிகிச்சை அறையிலும் கிருமி; சிகிச்சை இடைநிறுத்தம்!

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லுவோர்! உலகம் இருட்டி விட்டதாக நினைப்பு

wpengine

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும் ஞான­சார தேரர்

wpengine

கல்முனை மாநகர சபைக்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் கையளிப்பு

wpengine