பிரதான செய்திகள்

தேசிய கண் வைத்தியசாலையின் அனைத்து அறுவை சிகிச்சை அறையிலும் கிருமி; சிகிச்சை இடைநிறுத்தம்!

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள்! தமிழ் மொழி ஆசிரியர் விம­ல­சார தேரர்.

wpengine