செய்திகள்பிரதான செய்திகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆணும் பெண்ணும் T.56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர், மேலும் சந்தேக நபர் படபொல பொலிஸ் பிரிவின் பன்சல வீதிக்கு எதிரே உள்ள பொல்ஹுன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

வெல்லகே சமத் ஹர்ஷக பாதும் என்பவர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தலைமையக தலைமை காவல் ஆய்வாளர் அம்பலாங்கொடை:- 071 – 8591484 என்ற இலக்கத்திற்கு அல்லது எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு:- 091-2291095 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

விவசாய ஆராச்சி உதவியாளர் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

wpengine

ஐ.தே.க உள்ளுராட்சி தேர்தலில்! ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டி

wpengine

Duties and functions of new Ministers gazetted

wpengine