பிரதான செய்திகள்

தீக்கரையாகிய 30 மோட்டார் சைக்கிள்களும், 25 துவிச்சக்கர வண்டிகளும்!

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தூர இடங்களுக்கு வேலைக்காக பஸ்களில் செல்லும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்துச் செல்லும் தரிப்பிடமே தீப்பிடித்து எரிந்துள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், 25 இற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் முழுமையாக தீயில் கருகியுள்ளன.

தரிப்பிடத்திற்கு அருகில் குப்பைக்கு மூட்டப்பட்ட தீ காற்றில் பரவி மோட்டார் சைக்கிள்களில் விழுந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒரு தனி கட்சி சார்ந்த ரணிலுக்கு வாக்களிப்பது பொருத்தமில்லை சி.சிறீதரன்

wpengine

விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் நிலைமை மோசமாகிவிடும் – விமல் எச்சரிக்கை

wpengine

அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

wpengine