பிரதான செய்திகள்

திருவோடு ஏந்தி பிக்குமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதியங்கனை ரஜமஹா விகாரை பிக்குமார் திருவோடு ஏந்தி நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் பதுளை முதியங்கனை மகாவிகாரையின் பிரதம விகாராதிபதி முருத்தெனியே தம்மரத்ன தேரர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இவ்வாறு திருவோடு ஏந்தி நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதியங்கனை விகாரையில் தங்கியிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பிக்குகள் திருவோடு ஏந்தி பதுளை நகரில் உலர்உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை சேகரித்துள்ளனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பௌத்த விகாரைகள் ஊடாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

Editor

3 லச்சம் முஸ்லிம்களை வெளியேற்றிய மியன்மார்! வங்கதேசத்தில் தஞ்சம்

wpengine

கும்பிடு போட்டதை பேசிய ஜவாத்! அதை ரசித்துக்கேட்ட ஹக்கீம்

wpengine