பிரதான செய்திகள்

திருகோணமலையில் 3 பாடசாலைகளுக்கு பூட்டு!

திருகோணமலை மாவட்டத்தில், கல்விப் பிரிவுகள் சிலவற்றில், பாடசாலைகள் மூன்று திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில் மாணவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளர். அத்துடன், திருகோணமலை அபயபுரம் வித்தியாலயத்தின் அதிபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. அதனையடுத்து அவ்விரு வித்தியாலயங்களும் மூடப்பட்டன.

சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது அதனையடுத்து அப்பாட​சாலையும் மூடப்பட்டது.

அந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த ஏனைய மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால், மேற்படி மூன்று பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பணப்பரிமாற்றத்தின் போது அவதானமாக செயற்படுங்கள்! வவுனியாவில் விழிப்புணர்வு

wpengine

“பிரதமரை சந்திக்கின்றோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine

அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பௌத்த துறவியாக கருத முடியாது -யோகேஸ்வரன்

wpengine